பதிவு செய்த நாள்
25
ஜன
2020
05:01
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி (கும்பகோணம் அருகில்) குரு ஸ்தலத்தை அடுத்துள்ள, ஞானபுரீயில் சித்ர கூட க்ஷேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலை ஸ்தாபித்த ரமணி அண்ணா தலைமையில், கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானத்தால் இக்கோயிலின் திருப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், 33 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர், தன் இடுப்பில், நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளான மிருத சஞ்சீவினி, விசல்ய கரணீ, ஸாவர்ண கரணீ, ஸந்தான கரணீ ஆகிய மூலிகைகளுடன், பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். கோயிலில் 108 அடி உயர பஞ்ச தள விமானம், ஆஞ்சநேயர் சன்னதி முன்பு பிரமாண்டமான கர்ப்பகிரக அர்த்த மண்டபம், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், கோதண்டராமர் சன்னதிகள், மடப்பள்ளி உள்ளிட்ட திருப்பணிகள் பூர்த்தியாகி விட்டது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை வருகிற 31.1.2020 அன்று தொடங்குகிறது. 7.2.2020 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு ஆச்சாரிய சுவாமிகள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். அத்துடன் வைதீக ஆகம தர்ம காரியங்கள் தினகர் சர்மா தலைமையில் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகளும், ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சார்ய சமஸ்தானம் குழுவினரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.