பதிவு செய்த நாள்
27
ஜன
2020
10:01
கோவை : ஈரோட்டில், ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும், என, அகில பாரத ஹிந்து மகா சபை தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி: நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், முனிவர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகளால், போற்றி பாதுகாக்கப்பட்ட ஹிந்து மதத்தையும், தர்ம சாஸ்திரத்தையும் கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசுவதற்கு, தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும். ஆந்திராவில், ஹிந்து மதத்தை இழிவாக பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது, கடும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். ராமருக்கு செருப்பு மாலை அணிவித்த, ஈ.வெ.ரா., பிறந்த ஈரோட்டில், ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும். அயோத்தியில் ராமர் கோவில் பணி, மார்ச் மாதம் துவங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.