பதிவு செய்த நாள்
27
ஜன
2020
10:01
திண்டிவனம் ஸ்ரீ சிவசாயி பாபா ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கின்றது.திண்டிவனம்-செஞ்சி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீசலாணி ஸ்ரீலக்சுமி நகரில் புதியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ சிவசாயி பாபா ஆலயத்தின் நுாதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வரும் 31ம் ம் தேதி காலை 10 மணிக்கு மேல்,11.30 மணிக்குள் நடக்க உள்ளது.இதையொட்டி, நாளை(28 ம் தேதி) காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடக்கின்றது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றது. அடுத்த நாள் இரண்டாம் கால பூஜை உள்ளிட்டவைகளும், வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கின்றது.தொடர்ந்து, காலை 10.15 மணிக்கு செண்பக கணபதி ஆலய கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு பைரவர் கும்பாபிஷேகமும், காலை 10.45 மணிக்கு சிவ சாயி நாதர்,கிருஷ்ணர், சனி பகவானுக்கு கும்பாபிஷேகம் நடக்கின்றது.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ஷீரடி சிவ சாய்பாபா சேரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் ராஜசுதாகர், பொதுச்செயலாளர் சாய்செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.