முதுகுளத்துார் : முதுகுளத்துார் - பரமக்குடி சாலை வழிவிடு முருகன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48வதுநாள் மண்டல பூஜை நடந்தது.காலை 6:00 மணிக்கு மஹாகணபதி ஹோமம் தொடங்கி பால், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு பஜனை நடைபெற்றது. பழநி பாதயாத்திரை குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. முதுகுளத்துார் சுற்றுவட்டார மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சரவணா பழநி பாதயாத்திரை குழு மற்றும் ஆன்மிக அறக்கட்டளையினர் செய்தனர்.