திருப்போரூர் : கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில், புஷ்ப யாகம் நடந்தது.கேளம்பாக்கம் அடுத்த, கொளத்துாரில், கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், தை மாதம் திருவோண நட்சத்திரமன்று, புஷ்ப யாகம் நடத்தப்படும்.அந்த வகையில், நேற்று முன்தினம், புஷ்ப யாகத்துடன், விசேஷ திருமஞ்சனம் மற்றும் அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று, ரங்கநாதரை வழிபட்டனர்.இதை ஒட்டி, கோவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னிதிகளிலும், மலர் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.