பதிவு செய்த நாள்
28
ஜன
2020
02:01
திருப்போரூர் : தை மாத முகூர்த்த நாளான நேற்று, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரார்த்தனை, திருமணங்கள் அதிகம் நடந்தன.
சென்னை புறநகரில் பிரசித்தி பெற்ற கோவிலா கவும், பிரார்த்தனை தலமாகவும், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது.மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி, விசாக நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து, கந்தசுவாமியை வழிபடுகின்றனர். மேலும் காஞ்சி, சென்னை மாவட்டங் களைச் சேர்ந்த பலர், தங்கள் திருமணங்களை, இக்கோவிலில் நடத்துகின்றனர். அந்த வகையில், தை மாத முகூர்த்த நாளான நேற்று, 25 திருமணங்கள், கோவில் வளாகத்தில் நடைபெற்றன.இது தவிர, சென்னை மற்றும் திருப்போரூர் பகுதி மண்டபங்களில் திருமணம் செய்தோரும், சுவாமியை வழிபட, கோவிலில் குவிந்தனர்.இதன் காரணமாக, கந்தசுவாமி கோவிலில் நேற்று, ஏராளமான கூட்டத்தை காண முடிந்தது.