பதிவு செய்த நாள்
28
ஜன
2020
04:01
தேனி: தேவதானப்பட்டியில், மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் அமைந்துள்ள ஆதி காசிலிங்கேஸ்வரர் கோயிலில் வருகிற பிப்., 5ம் தேதி, புதன்கிழமை, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ஆதி காசிலிங்கேஸ்வரர், விசாலாட்சி, விநாயகர், முருகன், அக்னி வீரபத்திரர், காலபைரவர், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், நால்வர், அனுமன், நவக்கிரக நாயகர்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகிய தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
3.2.20 திங்கள் கிழமை - காலை 9 மணிக்கு கோபூஜை, புண்யாக வாசனம், கணபதி ேஹாமம்,
மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை, தீபாராதனை
4.2.20 செவ்வாய் கிழமை - காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை,பிரசாதம் வழங்குதல்
மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை,பிரசாதம் வழங்குதல்
இரவு 7 மணிக்கு விமான கலசம் வைத்தல், யந்திர ஸ்தாபனம்
5.2.20 புதன் கிழமை - காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு
காலை 9.45 மணிக்கு கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம், பின்னர் மூலவர் அபிஷேகம்,
தச தரிசனம், தீபாராதனை காலை 10 மணி முதல் அன்னதானம்
கும்பாபிஷேகத்தை ஸ்ரீ சங்கர சுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைக்கிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மூங்கிலைணை காமாட்சி அம்மன் ஆலய பூசாரிகள் ( ஐந்து பங்காளிகள், அட்டணம் பட்டி ) செய்து வருகின்றனர்