சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களில் பிரபலமாக விளங்குவது யானை வாகனம். விஷ்ணு கோயில்களில் இது ஆறாம் நாள் உத்ஸவத்தில் உபயோகிக்கப்படும். பல இடங்களில், யானை தும்பிக்கை மூன்று அல்லது நான்கு பாகங்களாகப் பிாிக்கப்பட்டு, வண்ணச் சித்திரங்கள் கொண்ட துணியால் இணைக்கப்பட்டிருக்கும். வீதி ஊா்வலங்களின்போது யானையின் தும்பிக்கை மட்டும் தனித்து ஆடுவதற்கு இது உதவுகிறது. பெருமாள் கோயில்களில் இந்த வாகனத்தை எடுக்கும்போது முன்புறங்கள் இரண்டும் முதலில் தூக்கப்பட்டு, அதன்பின், பின்புறம் தூக்கப்படுவதால், உட்காா்ந்த நிலையில் உள்ள யானை எழும்புவது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. வாகனத் தூக்கிகள் யானை போல் நடக்கும் அந்த நடைக்கு, சாய் நடை அல்லது ஏசல் என்று பெயா். சிவன் கோயில்களில் இது முருகனுடைய வாகனம். இது, பிணிமுகமென்று அழைக்கப்படுகிறது.
விஷ்ணுவிடமிருந்து தோன்றி, பின் இந்திரனுக்கு வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை, புராணங்களில் பிரபலமாகக் கூறப்படும் ஒன்று. இவ்வுலகைத் தாங்கும் எட்டு யானைகளில் இதுவும் ஒன்று. கிழக்கில் ஐராவதம் (ஆண் யானை), அப்ரமு (பெண் யானை); தென்கிழக்கில் புண்டரீகனும் கபிலனும்; தெற்கில் வாமனனும் பிங்களமும்; தென்மேற்கில் குமுதா, அனுபமா; மேற்கில் அஞ்சனா, தாம்ரகா்ணி; வடமேற்கில் புஷ்பதந்தா, சுப்ரதந்தி; வடக்கில் ஸா்வபெளமா, அங்கினா; வட கிழக்கில் ஸீப்ரதிகா, அஞ்சனாவதி அல்லது அமரகோசா என்ற யானைகள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.