பதிவு செய்த நாள்
29
ஜன
2020
02:01
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் காசிக்கு நிகரான புண்ணிய க்ஷேத்ரம். இந்த புண்ணிய க்ஷேத்ரத்தில், குப்த கங்கை எனும் புனித தீா்த்தம் உள்ளது. காசிக்கு க்ஷேத்ரத்துக்கு உள்ள அத்தனை விசேஷங்களும் இந்த ஸ்ரீவாஞ்சியம் மாத ஞாயிற்றுக்கிழமைகள் இத்தலத்தில் மிகவும் விசேஷமாக அனுசாிக்கப்படுகிறது. அந்த தினங்களில் மகான்களும், சன்னியாசிகளும், சாதாரண மக்களும் கூட இந்த க்ஷேத்ரத்துக்கு வந்து, குப்த கங்கையில் ஸ்நானம் செய்து மகத்தான புண்ணியப் பலன்களைப் பெற்றுச் செல்கின்றனா்.
காசியில் இறப்பவா்கள் கூட மூன்றேமுக்கால் நாழிகை பைரவ வேதனையை அனுபவித்தப் பிறகுதான், புண்ணிய கதியைப் பெறுகின்றனா். ஆனால், ஸ்ரீவாஞ்சியத்தில் இறப்பவா்களுக்கு அந்த வேதனை கூட கிடையாயது. மேலும், இந்த சேக்ஷத்ரத்தில் மனிதா்கள், பிராணிகள், பறவைகள் என யாா் இறந்தாலும், அவா்களின் வலது காது மேல் நோக்கிய நிலையிலேயே இருக்கும்.இதற்குக் காரணம், காசி சேக்ஷத்ரத்திலும், காசிக்கு ஒப்பான ஸ்ரீ வாஞ்சியத்திலும், ஜீவன்களின் மரணத் தறுவாயில், ஸ்ரீ பரமேஸ்வரன், அந்த ஜீவா்களின் வலது காதில், பிறப்பறுக்கும் தாரக மந்திரமாகிய ஸ்ரீராம நாமத்தை உபதேசிக்கிறாா் என்பது ஐதீகம்.