* உற்றார், உறவினரிடம் அன்புடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டாகும். * பிறரைக் குற்றம் சொல்லி பழகி விட்டால் உறவினர்கள் நம்மை விரும்ப மாட்டார்கள். * சிவபெருமானை வழிபடுவதே சிறந்த தவம். * குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்த பண்பாகும். * ஊருடன் ஒத்து போகாமல் பகை கொள்பவன் குடும்பத்துடன் அழிவான். * நல்லறிவு உள்ளவர்களுக்கு யாரிடமும் கோபம், பகை உண்டாகாது. * ஊருக்கு உழைப்பவனாக இருங்கள், ஒருவரிடமும் கடிந்து பேசாதீர்கள். * நல்லவர்களுடன் உறவு கொண்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள். * வறுமையில் வாடுபவர்களை இழிந்த வார்த்தைகள் சொல்லி ஏளனம் செய்யாதீர்கள். * பிறருக்கு முற்பகலில் தீமை செய்தால், அதுவே பிற்பகலில் நமக்கு பெருந்தீங்காக முடியும். * கூரிய அம்பு போல் திறமை இருந்தாலும் தற்பெருமை கொண்டு பேசாதீர்கள். * இல்லற வாழ்வே சிறந்தது. இதை விட உயர்ந்த தர்மம் வேறில்லை. * முதன் முதலில் நாம் அறிந்து கடவுள்கள் தாயும், தந்தையும் தான். * ஒருவன் தன் பரம்பரையைக் காத்திட மனைவியோடு கூடிக் குழந்தைப்பேறுடன் வாழ்வதே சிறப்பு. * நெருங்கிய நண்பனிடம் கூட, ஒருவன் தன் வறுமையை சொல்வது கூடாது. * பிறரது மனம் வருந்தும் விதத்தில் பேசுவதோ, செயல்படவோ வேண்டாம். - சொல்கிறார் அவ்வையார்