திருமூலர் சிவபெருமானின் திரிபுர தகனத்தைப் பற்றிக் கூறும்போது.... அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவன மும்மல காரியம் அப்புறம் எய்தமை யார் அறிவாறே - என்று திருமந்திரத்தில் அருளிச் செய்துள்ளார். ஆன்மாவில் படிந்துகிடக்கும் மும்மலமே முப்புரங்கள். இறைவன் இந்த மூவினைத் தொகுதிகளை அழித்து, தன்னை உணரும் ஞானத்தை அருள்கிறார். மும்மலமாகிய முப்புரக் கோட்டையை அழித்து பெருமான் அருள்புரிந்து ஆடுகிறார். எனவே, இந்த ஆட்டம் திரிபுர தாண்டவம் எனப்படுகிறது.