பதிவு செய்த நாள்
29
ஜன
2020
03:01
கோதாவரி நதி: இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் ஒன்று. மகாராஷ்டிரத்தின் திரிய ம்பகேஸ்வரில் உற்பத்தியாகி. தெலங்கானா, ஆந்திரப்பிரதேசங்களில் ஓடி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பல கோயில்கள் இதன் வழியில் அமைந்துள்ளன.
பஞ்ச நதி: வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து நதிகள் இணைந்தது; திருஐயாறு. இறைவன் ஐயாறப்பன்; இறைவி அறம் வளர்த்த நாயகி.
பம்பா நதி: கேரளத்தில் பெரிய ஆறுகளில் இதுவும் ஒன்று. ஐயப்ப சுவாமியின் திரு வாலயம் இதன் கரையில் அமைந்துள்ளது.
துங்க நதி: துங்கா, பத்திரா எனும் இரு நதிகளுள் ஒன்று. கர்நாடகாவில் உற்பத்தியாகி, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் வழியாக ஓடி, கிருஷ்ணா நதியுடன் சங்கமமாகின்றது.
ஆம்ப்ரவதி: அமராவதி நதி காவிரியின் கிளை நதிகளுள் ஒன்று. இது கேரளத்தில் உற்பத்தியாகி கரூர் - திருப்பூர் வழியாக ஓடிக் காவிரியில் சங்கமம் ஆகின்றது.
சொர்ணமுகி நதி: சுவர்ணமுகி எனப்படும் இந்நதி தென்னிந்தியாவில் ஓடுகின்றது. திரு மலை, காளஹஸ்தி ஆகிய திருத்தலங்கள் இதனருகே அமைந்துள்ளன. ஆந்திராவில் சித்தூர் மாநிலத்தில் ஓடும் இதன் குறுக்கே கல்யாணி அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.
சிந்து நதி: ஆசியாவின் மிக நீண்ட நதிகளுள் ஒன்று; இதன் கரையில்தான் உலகின் முதன்மையான நாகரிகம் தோன்றித் தழைத்துச் செழித்தது.
கன்னி நதி: குமரியாறு, சங்ககால நதி, பஃறுளியாறு எனவும் அறியப்பட்டது.
சந்திர நதி: சந்திரபாகா என்றறியப்படும் இந்நதி, மகாராஷ்டிரத்தின் முக்கியமான நதிய õகும். பண்டரிபுரத்திலுள்ள விட்டலனின் கோயில் இதன் கரையில் அமைந்துள்ளது.
மணிகர்ணிகை: மணிமுத்தாறு, இது தாம்ரவருணியின் கிளை நதி என நூலின் கீழேயுள்ள குறிப்புரை கூறுகிறது. இது வாரணாசியிலுள்ள மணிகர்ணிகை நதியாகவும் இருக்கலாம்.
பம்பு நதி - இது பம்பை நதியே! பாட்டில் எதுகைக்காகத் திரும்பக் கூறப்பட்டிருக்கலாம்.
தாம்ப்ரவதி: தாம்ரவருணி நதி, திருநெல்வேலியில் ஓடுகின்றது. நெல்லையப்பர் - காந் திமதியன்னை திருக்கோயில் இந்நதிக்கரையில் அமைந்துள்ளது.
நர்மதை: குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் உயிர்நாடியான இந்நதி, கங்கையை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது.
பொன்னி: காவிரியின் மற்றொரு பெயர்.
சங்கமுகம்: கேரளாவில் உள்ளது. அமைதியான சுத்தமான கடற்கரைத் தலம்.
கம்பை நதி: காஞ்சிபுரத்தில் உள்ளது.
கருடமங்கை: இது நாச்சியார்கோவிலை அடுத்துள்ள நதியாக இருக்கக்கூடும். அல்லது கொல்லூர் மூகாம்பிகை கோயிலருகே உள்ள, கருட குகை எனும் நதியாக இருக்கலாம் என்பது ஊகம்.