பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த சம்பவம் இது. நன்றாக படிக்கும் மாணவன் ஒருவன் படிக்காமல் தேர்வுக்கு சென்றான். அப்போது தான் எழுதி வைத்திருந்த பேப்பரை பார்த்து விடை எழுதினான். அதைப் பார்த்த ஆசிரியர்,‘‘ ஏன் இப்படி செய்கிறாய்? பள்ளிப் பருவத்திலேயே இப்படி செய்யலாமா?’’ என கோபித்தார். அதற்கு மாணவன், ‘‘படிக்காமல் இப்படியும் தேர்வெழுதி மதிப்பெண் பெறலாம் என நண்பன் கூறினான்’’ என்றான். ‘‘தேர்வில் இப்படி காப்பியடித்து வாழ்வில் முன்னேற முடியாது. மாறாக உழைப்பால் மட்டுமே உயர முடியும். உழைப்பவனுக்கே இறைவன் உதவுவான்’’ என அறிவுறுத்தினார்.