பொதுவாக கோயில்களில் முருகப்பெருமானின் வலதுபுறம் வள்ளியையும், இடதுபுறம் தெய்வானையையும் பார்த்திருப்பீர்கள். வள்ளி கையில் தாமரை மலரும், தெய்வானை கையில் நீலோற்பலம் மலரும் (சில இடங்களில் கிடைக்கும்) இருக்கும். முருகனுக்கு வலக்கண்ணாக சூரியனும், இடக்கண்ணாக சந்திரனும் உள்ளனர். சூரியக் கண்ணால் தாமரை மலரையும், சந்திரக்கண்ணால் நீலோற்பலம் மலரையும் பார்ப்பதால் அவை எப்போதும் மலர்ந்திருக்கும். இந்த மலர்களைப் போல முருக பக்தர்களின் வாழ்வும் மலர்ந்திருக்கும்.