மாம்பழத்திற்காக நடந்த போட்டியில் ‘அம்மையப்பரே உலகம்’ என சொல்லியபடி பெற்றோரைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றார் விநாயகர். அதைக் கண்டு தம்பியான முருகன் கோபத்துடன் பழநிக்கு சென்றார். ஏன் சென்றார்? இதில் ஆழமான தத்துவம் ஒன்று புதைந்துள்ளது. சிவனுக்குள்ளேயே உலகம் முழுவதையும் கண்டார் விநாயகர். அதாவது உலகமே அவருக்குள் அடக்கம் என்பது அவரது பார்வை. எல்லாம் சிவமயம் என்பதால் உலகையே வலம் வர வேண்டும் என்பது முருகனின் எண்ணம். சிவமே எல்லாம்; எல்லாமே சிவம் என்ற இரண்டு நிலைகளையும் உலகிற்கு உணர்த்தவே அண்ணனும், தம்பியுமாக இந்த திருவிளையாடலை நிகழ்த்திக் காட்டினர். பாலும் சுவையும் போல விநாயகரையும், முருகனையும் பிரிக்க முடியாது. எதிலும் சிவத்தைப் பார்ப்பவர்கள் ஞானம் என்னும் பழத்தைப் பெறுவர் என்பதை இது காட்டுகிறது.