பழநி: பழநி மலைக் கோவிலில், பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில், மூன்று நிமிடங்களில், மலைக்கோவிலுக்கு செல்ல, ரோப் கார் இயக்கப்படுகிறது. இது, மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, இன்று நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடத்தப்படும். நாளை முதல், ரோப்கார் இயங்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.