பழநி: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பருவதராஜ குல மகாஜன அமைப்பினர் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பருவதராஜ குலத்தினர் பல ஆண்டுகளாக பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள் மலைக் கோயிலில் தங்கியிருந்து பஞ்சாமிர்தம் தயாரித்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.
இவ்வாண்டும் வழிபாட்டுக்காக பழநிக்கு வந்தவர்கள், பக்தர்களுக்கு வழங்க 10 டன் மலை வாழைப்பழம், 10 டன் சர்க்கரை, 900 கிலோ பேரீட்சை, 75 கிலோ கற்கண்டு, 20 டின்களில் நெய், தேன், ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பில் ஈடுபட்டனர். இதனை அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இவர்கள் இன்று (பிப்.,14) இரவு மலைக் கோயிலில் தங்கியிருந்து வழிபடுவர். பழநி மலைக் கோயிலில் பருவதராஜகுல சமுதாய மக்கள் மட்டும் தான் தங்கி வழிபட அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.