நெட்டப்பாக்கம்:சிவன்படபேட்டை அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நெட்டப்பாக்கம் அடுத்த சிவன்படபேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி அன்று கரகம் எடுத்து ஜலம் திரட்டி வந்து, காப்பு கட்டி கொடி ஏற்றப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முதல் வரும் 21ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி இரவு மகா சிவராத்திரி, வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல், அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை விழா வரும் 23ம் தேதி மதியம் 1.00 மணிக்கு நடக்கிறது. 24ம் தேதி மாலை 5.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.