பதிவு செய்த நாள்
16
பிப்
2020
04:02
கூடலூர்: கூடலூர், ஆமைக்குளம் அருள்மிகு சக்தி விநாயகர் கோவில், 30ம் ஆண்டு தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.
கூடலூர், ஆமைக்குளம் அருள்மிகு சக்தி விநாயகர் கோவில், 30ம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த 14ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம்; 10:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும்; இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10 மணிக்கு நாடுகாணி ஆற்றிலிருந்து பரவ காவடி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்ந்தனர். பகல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை குழந்தைகள், பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று, காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் பாண்டியர் டான்டீ சரகங்களில் உள்ள அனைத்து கோவில்கள் வழியாக குடோன், ஆமைக்குளம், மரப்பாலம், அட்டிகொல்லி சென்று, கோவிலில் நிறைவுபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.