பதிவு செய்த நாள்
17
பிப்
2020
10:02
திருப்போரூர்: திருப்போரூர் பிரணவமலை கைலாசநாதர் கோவிலில், முறையாக நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜை நடக்குமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலின் துணைக்கோவிலாக, அதன் மேற்கு பகுதி பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.கடந்த, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், 2010ல், உபயதாரர் மூலம் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவிலில், அடிப்படை வசதி இல்லாததால், பக்தர்கள் குறைவாக வருவதோடு, சிரமப்படுகின்றனர்.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:கோவில் அருகே அமர்ந்து, சிலர் மது அருந்துகின்றனர். இக்கோவிலுக்கு வரும் குறைந்தளவு பக்தர்களும், குடிமகன்களால் திரும்ப செல்கின்றனர்.ஆதலால், சமூக விரோத செயலை தடுக்க, மலை கோவிலை சுற்றி இரும்பு கம்பி வலை அமைக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் கேட் மற்றும் பாதுகாவலர், பராமரிப்பிற்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.மேலும், முறையான கோவில் நடை திறப்பு, விசேஷ நாட்களில் முழு நேர கோவில் நடை திறப்பு, தினமும் பூஜை, கழிப்பறை வசதி, கூடுதல் குடிநீர், உயர்கோபுர மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.