திண்டிவனம் : இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. புதுச்சேரி-திண்டிவனம் பைப்பாஸ் சாலையின் இடையில் இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் அமைந்துள்ள கால பைரவருக்கு, நேற்று தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.காலை 9:00 மணிக்கு, பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.பின், பைரவர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று, எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.