மாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2020 10:02
ராமேஸ்வரம்: மாசி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் பர்வதத்தில் எழுந்தருளினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.,14ல் மாசி மகாசிவராத்திரி விழா கொடி ஏற்றப்பட்டு, விழா துவங்கியது. 3ம் நாள் திருவிழாவான நேற்று காலை 6:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து வெள்ளி பூத வாகனம், வெள்ளி கிளி வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி புறப்பாடாகினர். கோயில் நடை சாத்தப்பட்டது. பின் சுவாமி, அம்மன் வீதி உலா சென்று கெந்தமான பர்வதத்தில் எழுந்தருளினர். அங்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தியதும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் சுவாமி, அம்மன் பர்வதத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 8:30 மணிக்கு கோயிலுக்கு வந்ததும், நடை திறக்கப்பட்டது. பின் அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜை முடிந்ததும் கோயில் நடைசாத்தினர்.