காரைக்குடி: காரைக்குடி அருகே வயிரவபுரம் வயிரவமூர்த்தி கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை நடந்தது.
வயிரவபுரத்தில் உள்ள ஸ்ரீவயிரமூர்த்தி கோயிலில், 108 கோமாதாபூஜை நேற்று நடந்தது. பிப்.,15 ல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கின. நேற்று 2ம் கால பூஜை, அஷ்டமி பைரவர் ேஹாமம் நடந்தது. பின்னர் 108 கோமாதாக்களுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை செய்து, கோ பூஜை நடத்தினர். அதை தொடர்ந்து சங்காபிேஷகம், கலசபூஜை நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கார்த்தி எம்.பி., பெரியகருப்பன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஸ்கர் விழா ஏற்பாட்டை செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி: சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 21 வகையான அபிேஷகம் நடந்தது. வடுக பைரவருக்கென இங்கு தனி சன்னதி உண்டு. அஷ்டமியை முன்னிட்டு சன்னதி முன் யாகசாலை நடத்தினர். பைரவருக்கு 21 விதமான அபிேஷகம் செய்தனர். ரவி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.