என்ன தேவை: அரிசி– 400 கிராம் வெல்லம் – 300 கிராம் பாசிப்பருப்பு – 500 கிராம் எண்ணெய் – 1/4 கிலோ
எப்படி செய்வது: அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து வடித்து சற்று உலர்த்தி, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை பாதியளவு மாவுச் சல்லடையிலும், மீதமுள்ள மாவை ரவைச் சல்லடையிலும் சலித்து எடுக்கவும். பருப்பை சற்று வதக்கி, கால் வேக்காட்டில் வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பருப்பு வடித்த தண்ணீரில் வெல்லத்தை துாளாக்கி கரைத்து வடிகட்டி கொதிக்க வைக்கவும். வெல்லம் ஆறிய பின் அதை மாவில் ஊற்றி, வேகவைத்த பருப்பைச் சேர்த்து பணியாரம் ஊற்றும் பக்குவத்தில் மாவை கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மாவைக் கரண்டியால் எடுத்து ஊற்றவும். பணியாரம் எழும்பி மேலே வந்ததும் திருப்பி விட்டு எடுக்கவும்.