பதிவு செய்த நாள்
18
பிப்
2020
11:02
திருமலை: மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலுக்கு, ஏழு திருக்குடைகளை, ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், அதன் அறங்காவலர், ஆர்.ஆர்.கோபால்ஜி நேற்று சமர்ப்பித்தார்.
புகழ் பெற்ற சைவ தலமான காளஹஸ்தி சிவன் கோவிலில், மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சுவாமி புறப்பாட்டின்போது, அலங்கரிப்பதற்கு தேவையான திருக்குடைகள், கோவிலுக்கு நன்கொடையாக நேற்று வழங்கப்பட்டன.காளஹஸ்தி சிவனுக்கு சமர்ப்பிப்பதற்காக, சென்னையைச் சேர்ந்த ஹிந்து தர்மார்த்த சமிதி நிர்வாகிகள், கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும்,ஏழு திருக்குடைகளை கொண்டு வந்தனர்.காளஹஸ்தி கோவில் வளாகத்தில், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, அந்த திருக்குடைகளை, நேற்று காலை நன்கொடையாக சமர்ப்பித்தார். தேவஸ்தான நிர்வாக அதிகாரி சந்திரசேகர ரெட்டி பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து, தேவஸ்தானம் சார்பில், ஆர்.ஆர். கோபால்ஜிக்கு தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி வழங்கப்பட்டன.