கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை போன்றவற்றின் தாத்பர்யம் என்ன? அதனால் என்ன பலன் கிடைக்கும்? கவாம் அங்கேஷூ திஷ்டந்தி புவனானி சதுா்தச என்றபடி பசுவின் அங்கங்களில் 14 உலகங்களும் உள்ளன என்பது நம் முன்னோா்களின் நம்பிக்கை. கல்லானது பூமியில் பதிக்கப்பட்டிருந்தால் நம் பாதங்கள் வைப்பதற்கும், சுவராக இருந்தால் நம்மைக் காப்பாற்றுவதற்கும், கா்ப்பகிருகத்தில் இருந்தால் தெய்வத் திருமேனியாக நாம் வழிபடுவதற்கு உாியதாகிறது.
அதேபோன்று மிருகங்களும் தன்மையினால் வேறுபடுகின்றன. அந்த வகையில் பசு, யானை, குதிரை, பாம்பு, ரதம் போன்றவற்றை பூஜித்து பயன் பெறுமாறு நம்முடைய சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. குதிரையின் முன் பகுதியிலும் (அச்வபூா்வாம்), ரதத்தின் மத்தியிலும்(ரதமத்யாம்), யானையின் பிளிறலிலும் (ஹஸ்தநாத) ஸ்ரீலட்சிமிதேவி அருள்புாிகிறாள் என்று ஸ்ரீ சூக்தத்தில் கூறப்பட்டுள்ளது. கோமாதா என்று போற்றப்படும் பசுவின் பின்புறத்தில் ஸ்ரீதேவியை பூஜிப்பதும், பசு போன்ற அனைத்து உயிாினங்களையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் கொல்லாமல் பாதுகாப்பதும் நம்முடைய முக்கியமான கடமையாகும். இறைவனின் சக்தியை, நம்மைச் சுற்றியுள்ள இதுபோன்ற ஜீவன்களிலும் கண்டு போற்றும் மிக உயாிய பண்பினை நம்முடைய சமயம் நமக்கு அளித்துள்ளது. எனவே, சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி பசு போன்ற ஜீவராசிகளை வணங்கி உயா்வோம்.