பதிவு செய்த நாள்
20
பிப்
2020
10:02
ஈரோடு: திருப்பணிகள் நடக்கும், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், சித்திர வேலைப்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கும்பாபி ஷேக திருப்பணிகள், கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகிறது. இதில் சுற்றுப்பிரகார கற்கள் புனரமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல், சுற்றுச்சுவர் வண்ணம் தீட்டுதல், கோசாலை புனரமைத்தல், அன்னதானக் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும், ராஜகோபுரம் மற்றும் சிற்பங்கள் வண்ணம் தீட்டும் பணியும் நடந்து வருகிறது. தற்போது கோவில் பிரகார மண்டபம் மேற்கூரை முழுவதிலும், சித்திரம் வரையும் பணி தீவிரமாக நடக்கிறது. அதற்காக திருவையாறு, கும்பகோணம் பகுதியில் இருந்து பிரத்யேகமாக சித்திரம் எழுதும் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் கையலை காட்சி, சோமஸ்கந்தர் உள்ளிட்ட தெய்வங்களின் படங்கள் வரையப்படுகிறது. இதனால், கோவில் வளாகம் வண்ண மயமாக காட்சியளிக்கிறது.