ஈரோடு: கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, ஈரோட்டில் இருந்து, 420 போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர். கோவை வெள்ளியங்கிரி மலையில், ஈஷா யோகா மையம் சார்பில் இன்று மாலை முதல், சிவராத்திரி விழா நடக்கிறது. விடிய, விடிய பல்வேறு நிகழ்ச்சிகள் சிவராத்திரியை முன்னிட்டு நடக்க உள்ளது. இதற்காக ஈரோட்டில் இருந்து இரண்டு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் ஆயுதப்படை போலீசார், 120 பேர், உள்ளூர் போலீசார், 300 பேர் இன்று அதிகாலை போலீஸ் வாகனங்களில் புறப்படுகின்றனர். சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றவுடன், நாளை மதியம் அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு வந்தடைகின்றனர்.