தேவதானப்பட்டியில் மகாசிவராத்திரி விழா: ஏற்பாடுகள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2020 11:02
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை இரவு துவங்குகிறது. இதற்காக வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய வரிசையாக செல்வதற்கு கம்புகள் கட்டப் பட்டுள்ளது. தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு டாக்டர் தலைமையில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மஞ்சளாற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு உடைமாற்றும் அறைக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வியாபாரிகளுக்காக தற்காலிக கடைகள. அமைக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக கழிப்பிடம், தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.