பதிவு செய்த நாள்
20
பிப்
2020
11:02
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டது.
பெள்ளாச்சியின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடக்கிறது. இந்தாண்டு, கடந்த, 11ம் தேதி திருவிழா துவங்கியது. கடந்த, 17 ம் தேதி அணி எடுப்பு நடந்தது. நேற்று முன்தினம் கரியகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு, 11:00 மணிக்கு மேல் மாரியம்மன் கோவில் முன் கம்பம் நடப்பட்டது.பல ஆண்டுகளுக்கு பிறகு, தன்னார்வலர்களால் துாய்மை செய்யப்பட்ட பொள்ளாச்சி தெப்பக்குளத்தில் கம்பம் நீராட்டப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வந்து நடப்பட்டது
குறிப்பிடத்தக்கது. நேற்று அதிகாலை முதல் கோவிலுக்கு திரளாக வந்த பெண்கள், கம்பத்துக்கு நீரூற்றி, மஞ்சள் மற்றும் வேப்பிலை அணிவித்து, உப்பு, மிளகு கொட்டி வழிபட்டனர்.வரும், 25ம் தேதி பூவோடு வைத்தல், 28ம் தேதி கிராம சாந்தி, 29ம் தேதி கொடி கட்டுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் மார்ச், 3ம்தேதிதிருவிழா நாளன்று மாவிளக்கு எடுத்தல், திருக்கல்யாண உற்சவம், முதல் நாள் தேரோட்டம் நடக்கும். மூன்று நாள் தேரோட்டத்துக்கு பிறகு, மார்ச், 6ம் தேதி தேர் நிலை சேர்ந்த பின், தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது. 7ம் தேதி மஞ்சள் நீராடுதல், கம்பம் நடுதல், 9ம் தேதி மகா அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.