பெண்ணாடம்: பெண்ணாடம், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், அனுமன் சுவாமிக்கு, மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, காலை 9:30 மணிக்கு மூல நட்சத்திர சிறப்பு பூஜை; 10:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் திரவிய அபிஷேகம்; காலை 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அனுமன் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.