பதிவு செய்த நாள்
21
பிப்
2020
10:02
மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயிலில்களிலும் இன்று (பிப்.,21) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்கள், இஷ்ட, குல தெய்வ கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசி அமாவாசை நாளில் மகா சிவராத்திரி விழா நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று ஏராளமான கோயில்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் குல தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். சிவாராத்திரி விழாவிற்காக வெளியூர்களில் உள்ளோர் தங்களது கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை அம்மன், சுவாமி மற்றும் உற்ஸவர் சன்னதிகளில அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வடபழநி முருகன் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.