திண்டுக்கல்,திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நேற்று மாலை 6:00 மணிக்கு பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவங்கியது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர்.கோயில் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இன்று (பிப்.,21) காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேரில் நகர் பகுதியில் வீதியுலாவும் நடக்கிறது. நாளை மறுநாள் (பிப்., 23) இரவு 8:00 மணிக்கு சாட்டுதல், பிப்.,25 பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.