பதிவு செய்த நாள்
22
பிப்
2020
11:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் நான்கு கால பூஜை நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பிரகன்நாயகிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலை 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, மூலவர் வீரட்டானேஸ்வரர், சிவானந்த வல்லிக்கு அபிஷேகம், அலங்காரம், பிரதோஷ வழிபாட்டுடன் மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகாசிவராத்திரி முதல்கால தீபாராதனை நடந்தது. உற்சவர் சம்காரமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆலய பிரதட்சணமாக வலம் வந்தார். தொடர்ந்து இரவு11:00 மணி, அதிகாலை 3:00 மணி, 4:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை என நான்கு கால பூஜைகள் நடந்தது. பக்தர்களின் ஸ்ரீ ருத்ரம், திருவாசகம் என ஓம் நமச்சிவாயா கோஷத்துடன் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.