திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூத்த மலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் (பிப்.20) துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேரில் நகர் பகுதியில் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் பூச்சொரிதல் அலங்கார ரதத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் மலர்களை சுவாமி மீது வீசி வழிபட்டனர்.