தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2020 02:02
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறும் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் இரவு 10 மணிக்கு முதல் கால அபிஷேக பூஜை துவங்கியது. இதில் தர்பையில் முளைத்த சுயம்புவான தர்பாரண்யேஸ்வரர், செண்பக தியாகராஜர், பிரணாம்பிகை அம்பாள், சனிஸ்வர பகவான் ஆகியோருக்கு பலவகையான திரவங்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இன்று (பிப்.,22) காலை 10 மணிக்கு பிரணாம்பிகை அம்பாள் சமேதராக தர்பாரண்யேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.பின் தெற்கு வீதி. வடக்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ். தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.