வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் 137 ம் ஆண்டு மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு வீரக்குமாரசாமி தேர்திருவிழாவில் நேற்று ரத உற்சவம் நடந்தது.
வீரக்குமாரசாமி தேர் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் தேர் நிலைபெயர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 4.20 மணியளவில் ரத உற்சவம் நடந்தது. இன்று மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேர் நிலை சேர்கிறது. வெள்ளகோவில் கடை வீதியில் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை சரி செய்து அனுப்புகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கேயம் டிஎஸ்பி கணேசன் காங்கேயம் டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் மனோகரன் உட்பட 70 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.