நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2020 10:02
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி, ேஹாமத்தை தொடர்ந்து அம்மனுக்கு 21 வகையான அபிஷேகம் நடந்தது.
பின் அம்மனுக்கு வெள்ளிகாப்பு அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் முன் உள்ள கம்பத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்ட விழா துவங்கியது. இன்று கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குகின்றனர். இதன்பின் முக்கிய நாட்களில் மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் செல்வார். மார்ச் 8 ல் பக்தர்கள் பால்குடம் எடுப்பர். விழாவின் முக்கிய நாளான மார்ச் 10 அன்று அதிகாலை முதல் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கும், இதையடுத்து கழுமர ஏற்றம் நடக்க உள்ளது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்குவர். மறுநாள் மஞ்சள் நீராட்டு, பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலத்துடன் விழா நிறைவடையும்.