பழநி : மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயில் வாசலில் திருக்கம்பம் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடந் தது.பழநி முருகன் கோயில் உபகோயிலான கிழக்குரத வீதி மாரியம்மன் கோயிலில் பிப். 21 முதல் முதல் மார்ச்.12 வரை மாசித்திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் பூஜைக்கு பின் கோயில் வாசலில் நடப்பட்டது.கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 10ல் திருக்கல்யாணம், மார்ச் 11ல் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 12ல் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயசந்தரபானுரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.