ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் இரவு பூசாட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு மலர்கள், மூலவருக்கு சாற்றப்பட்டது. மார்ச், 2ல் கொடியேற்றுதல், 8ல் பாலாபிஷேகம், 9ல் இரவு அக்னிகபாலம், 10ல் குண்டம் பற்ற வைத்தல், 11ல் அதிகாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல், நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 12ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.