பதிவு செய்த நாள்
28
பிப்
2020
11:02
உடுமலை: மானுப்பட்டி மதுரை வீரன் கோவிலில், பெரும்பூஜை பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி, நேற்று நடந்தது.உடுமலை மானுப்பட்டி தம்புரான் கோவில் பிரிவு மேற்குப்பகுதியில், மதுரை வீரன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், பெரும்பூஜை பெருவிழா, 26ம் தேதி துவங்கியது. கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து செலுத்தினர். நேற்று, பெரும்பூஜை விழாவையொட்டி, மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, கோவிலில், பகல் 12:00 மணிக்கு, மறுபூஜை நடக்கிறது.