வடமதுரை:வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நாளை (பிப்.29-ல்) பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்குகிறது. நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா வருவார். மார்ச் 8-ல் அம்மன் சாட்டுதலும், மார்ச் 10 முதல் மார்ச் 14 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.மார்ச் 15 இரவு பக்தர்கள் பூக்குழியில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மார்ச் 16-ல் அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்ச் 17-ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை கோயில் தக்கார் சுகன்யா மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.