மதுரை: மாணவர்கள் தாங்கள் எழுதப்போகும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்காக, மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ள, ஹயக்கிரீவர் கோயில், நவ நரசிம்மர் தியான மண்டபத்தில், ஸ்ரீ நரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் மூலம் கூட்டு வழிபாடு மற்றும் மூல மந்திரம் மஹா யாகம் நடைபெற்றது. இதில் 22ம் தேதி லட்சார்ச்சனையும், 23ம் தேதி மூல மந்திர மஹா யாகமும் நடைபெற்றது. மாணவர்கள் இதில் கலந்து கொண்டால், படிப்பில் அதிக ஆர்வம் காட்டி சிறந்த முறையில் தேர்வெழுதி, அதிக மதிப்பெண் பெற்று, வாழ்வில் மேலும் பல சாதனைகள் செய்வார்கள், என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். லட்சார்ச்சனை பிரசாதம் வேண்டுபவர்கள், 98420 24866, 94882 14267 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.