பதிவு செய்த நாள்
28
பிப்
2020
12:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் ஒன்றாகும். ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் மாசி மக பெருவிழா, இன்று (பிப்.,28) கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜைகள் நடந்தது. பஞ்ச மூர்த்திகள் கொடிக்கம்பத்தின் அருகே எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, ரிஷபக் கொடி ஏற்றி விழா துவக்கி வைக்கப்பட்டது. தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.