திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பம்ப்ஹவுசில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடந்தது.
திருக்கோவிலூர் பம்ப்ஹவாசில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாலை 5:00 மணிக்கு தென்பெண்ணையாற்றில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து விநாயகர் பூஜை, மகேஸ்வர பூஜை நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு பெரிய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி வேண்டுதல் உள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 3:00 மணிக்கு கோவிலை அடைந்தது. தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லப விங்கேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.