தேவிபட்டினம்: சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை உற்ஸவ விழா நடந்தது.
மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பிப்.26 (புதன்கிழமை) இரவு 7:00 மணிக்கு அத்தியூத்து பிள்ளையார் கோயிலில் இருந்து கரகம், மயில் காவடி, பால்குடம், அக்னிச்சட்டி, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் பகவதி அம்மன் கோயில் வந்தடைந்தனர். இரவில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 4:00 மணிக்கு பகவதிஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆரத்தி செய்யப்பட்டது. கருப்பண்ண சுவாமி கோயில் முன்பு நுற்றுக்கணக்கான கிடா, சேவல் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்டார கிராமங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமான குலதெய்வ குடிமக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அத்தியூத்து கிராம பொதுமக்கள், கோயில் விழாக் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.