கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று புணவாசிப்பட்டியைச் சேர்ந்த சமயபுரம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக பக்தர்கள் கருப்பத்தூர் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து, மலர்மாலைகளை கொண்டு அலங்காரம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.