பதிவு செய்த நாள்
29
பிப்
2020
12:02
கூடலுார்:கூடலுார் புளியாம்பாறை ஆயிரம்வில்லி பகவதி அம்மன் கோவில் தாலப்பொலி ஊர்வலம் சிறப்பாக நடந்தது.கூடலுார் புளியாம்பாறை ஆயிரம்வில்லி பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 6:00 மணிக்கு பஞ்சகவ்ய -கலசம், அபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு விழா கொடி ஏற்றப்பட்டது.பகல், 12:00 மணிக்கு வாழை, இளநீர், தாலப்பொலியுடன் ஊர்வலம் துவங்கியது. செண்டை மேளம், பழங்குடி மக்களின் பாரம்பரிய இசையுடன் நடந்த ஊர்வலத்தில், தாலப்பொலியுடன் அம்மன் ஆபரணங்களும் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.கோவிலில், அம்மனுக்கு ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை, அத்தாழ பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.இன்று காலை மஹா கணபதி ஹோமம், உஷ பூஜை: 11:00 மணிக்கு அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சி; 12:00 மணிக்கு மதிய பூஜை நடக்கிறது.