பதிவு செய்த நாள்
13
மார்
2020
01:03
நல்ல மனம் படைத்த மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன், ராகு, சுக்கிரனால் நற்பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். ராகு உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். முயற்சியில் வெற்றி கிடைக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.
குரு மார்ச் 27ல் அதிசாரம் அடைந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சுமாரான இடம் தான். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. அதன் மூலம் பிரச்னையை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். மேலும் சுபநிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொடுப்பார். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி கிடைக்கும்.
குடும்பத்தில் சுக்கிரனால் மதிப்பு. மரியாதை அதிகரிக்கும். உறவினரால் உதவி கிடைக்கும். மார்ச் 28க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். குருவின் பார்வையால் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பெண்களால் ஆதரவால் வாழ்வில் மேன்மை காண்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பெண்கள் குதுாகலமாக இருப்பர். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் அனுசரணையுடன் இருப்பர். மார்ச் 27க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். பணியிடத்தில் மதிப்பு உயரும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைக் காண்பர்.
உடல்நலம் சீராக இருக்கும். கண்நோய் பூரண குணமடையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள், பொருள் விரயம் முதலியன மார்ச் 23 க்கு பிறகு மறையும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியான பயணம் ஏற்படும். மார்ச் 28க்கு பிறகு சாதகமான திசையில் காற்று வீசுவதால் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குருவின் பார்வையால் உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும்.
* வியாபாரிகள் மார்ச் 28க்கு பிறகு அதிக லாபத்தை பெறுவர். குருவின் பார்வையால் உற்சாகம் பிறக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் மார்ச் 27க்கு பிறகு சிறப்பான பலனைக் காண்பர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பொருளாதார வளம் காண்பர்.
* விவசாயிகளுக்கு வருவாய்க்கு குறைவிருக்காது. நெல், உளுந்து, கிழங்கு வகைகள், நிலக்கடலை, மற்றும் கரும்பு, எள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறிகள் மூலம் வருமானத்தை காணலாம்.
சுமாரான பலன்கள்
* வியாபாரிகளுக்கு ஏப்.1க்கு பிறகு பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஏப்.1க்கு பிறகு சக ஊழியர்கள் மத்தியில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு வேலைப்பளு இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* ஐ.டி.,துறையினர் முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டியதிருக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஆகலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். மார்ச் 27க்கு பிறகு ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.
நல்ல நாள்: மார்ச் 14,15,16,19,20,24,25,31 ஏப்.1,2,3,4,9,10,11,12
கவன நாள்: ஏப். 5,6 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்:சிவப்பு,வெள்ளை.
பரிகாரம்:
* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய்தீபம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்
* கார்த்திகையன்று முருகனுக்கு அர்ச்சனை