சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறை ஆறு வகைப்படும். அவை சுயம்பு, தைவிகம், திவ்யம், மானுஷம், ஆர்ஷகம், ஆசுரம் என்பன. பார்வதி தேவியால் லிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது தைவிகம். தேவர்கள் – திவ்யம். மனிதர்கள் – மானுஷம், ரிஷிகள் – ஆர்ஷம், அரக்கர்கள் – ஆசுரம் எனப்படும். இந்த ஐந்தும் குறிப்பிட்ட காரணத்திற்காக நிறுவப்பட்டதாகும். உயிர்கள் மீதுள்ள கருணையால் கடவுளே தானாகத் தோன்றும் திருமேனி சுயம்பு. மற்றதை விட சுயம்புவிற்கு சக்தி அதிகம் என்பதால் வழிபட்டவருக்கு கேட்ட வரம் கிடைக்கும்.